Wednesday, August 19, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 540

வசுதேவரால் ரித்விக்குகளாக முறைப்படி வரிக்கப்பட்ட ரிஷிகள், சிறந்த முறையில் ஒரு யாகத்தை நடத்திக் கொடுத்தனர்.

அனைவரும் உறவுகளுடன் புத்தாடை ஆபரணங்கள் அணிந்து விளங்க தேவலோகத்தில் நடக்கும் யாகம் போல் இருந்தது அக்காட்சி.

வசுதேவர் ரிஷிகளுக்கு ஏராளமான தக்ஷிணை கொடுத்தார். வந்திருந்த அரசர்களை நன்கு கௌரவித்து பரிசுகள் கொடுத்தார்.

அனைவரும் வேள்வியைப் புகழ்ந்து கொண்டே தத்தம் இருப்பிடம் சென்றனர்.

எல்லாரும் கிளம்பியதும் வசுதேவர் நந்தகோபரை ஆரத் தழுவிக்கொண்டார். பிரியா விடை கொடுத்தார். 

பாசத்தை வெல்ல எவராலும் இயலாது. செய்நன்றி மறந்த எங்களிடம் தாங்கள் காட்டும் பாசம் மிக உயர்ந்தது. கைம்மாறு செய்ய இல்லாதது. என்றார் வசுதேவர்.

நந்தர் மேலும் ஒருநாள் தங்கிவிட்டு பின்னர் கிளம்பி மதுரா சென்றார்.

கண்ணனுடன் அனைவரும் துவாரகை திரும்பினர். அனைவரும் வெகு நாள்களுக்கு இந்தக் கதைகளைப்‌ பேசிக்கொண்டிருந்தனர்.

வசுதேவர் முனிவர்களின் உபதேசத்தால் சித்தம் தெளிந்து கண்ணனை வணங்கித் துதித்தார்.

கபிலர் தேவஹூதிக்கு வழங்கியதைப் போல கண்ணன் வசுதேவருக்கு ப்ரும்ம ஞானத்தை அருளினான்.

அப்போது தேவகி கண்ணன் தன் குருவின் இறந்த பிள்ளையை மீட்டுத் தந்தான் என்று கேள்வியுற்று மிகவும் வியப்படைந்தாள். அவளும் தாயல்லவா. தன் இறந்த குழந்தைகளை நினைத்து மிகவும் வருந்தினாள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment