ஸ்ரீமத் பாகவத பழம்

"ஸ்ரீமத் பாகவதம்" - இது ஸ்ரீ வேத வியாசரால் இயற்றப்பட்ட பதினெட்டு புராணங்களில் ஒன்று. ஐந்தாவது வேதமான மஹாபாரதத்தின் தொடர்ச்சியாக இந்த புராணக் கதை ஆரம்பிக்கின்றது. இந்த புராணத்தில் 12 ஸ்கந்தங்களும், 18,000 ஸ்லோகங்களும் உள்ளன.



திருவண்ணாமலையில் இறைவன் மலையாய் இருக்கிறார் என்று கேள்வியுற்றிருப்போம்.

நைமிஷாரண்யத்தில் இறைவன் காடாக இருக்கிறார்.

புஷ்கரம் என்னும் புண்ணிய தல த்தில் இறைவனே ஏரியாக இருந்து அனைவரின் ஸம்ஸார தாகத்தையும் தணிக்கிறார்.

மரங்களில் அரசமரமாக வீற்றிருக்கிறார்.

அதுபோல், புத்தகங்களில் ஸ்ரீமத்பாகவதமாக இறைவன் இருக்கிறார்.

"श्रीमद्भागवताख्योयं प्रत्यक्ष: कृष्ण एव हि" - "ஸ்ரீமத் பாகவதாக்யேயாம் ப்ரத்யக்ஷ: க்ருஷ்ண ஏவ ஹி" 
என்பது பாகவத மாஹாத்ம்யத்தில் இருக்கும் ஒரு ஸ்லோகம்.

ஸ்ரீமத்பாகவதத்தின் உருவில் ப்ரத்யக்ஷமாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே இருக்கிறார்.

இந்த பாகவதத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.

புராணம் என்றால் படிப்பார்கள், சொல்லுவார்கள், பிறர் சொல்லக் கேட்பார்கள்.
யாரவது பருகினார்கள், அருந்தினார்கள், சுவைத்தார்கள்  என்றெல்லாம் எண்ணிப் பார்க்க முடியுமா?
ஆனால் இந்த புராணத்தைப் பருக முடியும், அதுவும் காது வழியாக.

தேனினும் இனிய பகவானின் குணங்களை, லீலைகளைக் சொல்லும்  நூல், சொல்பவர்களுக்கு, கேட்பவர்களுக்கு, படிப்பவர்களுக்கு, என அனைவருக்கும் இனிமையை வாரி வழங்கும்.

ஸ்ரீவேதவ்யாஸர் ஸ்ரீமத்பாகவதத்தை வேதம் என்ற மரத்தில் பழுத்த பழம் என்கிறார்.
அந்த பழத்தை ஸ்ரீசுகர் என்னும் முனிவர், கிளி வடிவில் கொத்தி சுவைத்து நமக்காக அருளியுள்ளார்.

கிளி வாயிலிருந்து நழுவி விழுந்த அந்த பழத்தை, பல்வேறு மஹான்கள் சுவைத்து நமக்குப் புரியும்படி அருள்கின்றனர்.அவ்வகையில் எனது குருநாதரான மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ  முரளீதர ஸ்வாமிஜி அவர்கள் சொல்லிக் கேட்ட கதைகளை, என்னால் இயன்றவரை  ஒரு தொகுப்பாக, குருவருளால் இங்கு வழங்குகிறேன்.

சுகமுனி எனும் கிளி கொத்திக்கொடுத்த பழத்தைப் பருக அனைவரும் வருக!!

-ஹரிப்ரியா

ஸ்ரீமத்பாகவத பழங்களைச் சுவைக்க இங்கே அழுத்தவும்...


10 comments:

  1. Madam, I am missing 125 posts (post 444) between April 2020 and post 569) in September 2020. Could you please re-post the same for the benefit of people like me? Thanks and namaskarams. Ramesh Ramanan.

    ReplyDelete
    Replies
    1. Radhe Radhe!! Namaskarams and Thank you !! Now the posts has been updated upto Rukmini Kalyanam.
      Will update soon

      Delete
  2. மிகவும் எளிய நடையில் பாகவத பழங்களை ரசித்து சுவைத்து மகிழ்ந்தோம். பனிரெண்டாவது ஸ்கந்தத்தை எதிர்பார்க்கின்றோம்.

    ReplyDelete
  3. Radhe Krishna 15-08-2021

    Dear Sir/Madam,

    You have described Srimadh Bhagavatha nicely upto 11th Skanda, I wish to read your Description about 12th Skanda which explain brief Bhagavatha and kaliyuga etc, Kindly post that also please.

    Ram Ram

    ReplyDelete
  4. பாகவதத்தை எளிய முறையில் வாசித்து முடிந்தவரை அறிய வேண்டும் என்ற ஆவல் உண்டு... அது கடந்த சில மாதங்களாக பெருகி வருகிறது. படித்து வருகிறேன் உங்கள் பதிவுகளை; மிக அற்புதமான பதிவுகள். உங்களுக்கும் ஸ்ரீ முரளிதர் ஸ்வாமிக்கும் கோடானுகோடி நன்றிகள். பாகவதம் - விளக்கம் / எளிய முறையில் என தலைப்பு கொடுக்காமல், பாகவதம் பழம் என தலைப்பு கொடுத்தமைக்கு ஏதாவது சிறப்பு காரணம் உண்டா; அதையும் கூறினால், பருகுவோம்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் இங்கு பாகவதத்தை எளிய நடையில் தொகுத்து தட்டச்சு செய்து பகிர்ந்துள்ளதை பகிரலாமா, நண்பர்களுடன்

      Delete
  5. i am gojng to post all your bhagavadham writeups above in my wattsapp group.. with your permission..

    thank you for wonderful write up and appreciate your hardwork..

    ReplyDelete
  6. Madam, we would like to publish your very nice article in various Sampradhya groups, can we have your permission to do so

    ReplyDelete