Wednesday, July 24, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 299

குசனின் மகன் அதிதி. அவனது மகன் நிஷதன். அவனது புதல்வன் நபன். நபனின் மகன் புண்டரீகன். அவனது மகன் க்ஷேமதன்வா. அவனது மகன் தேவாநீகன். அவனது மகன் அநீஹன். அவனது புதல்வன் பாரியாத்ரன். அவனது மகன் பலஸ்தன்‌. இவனது மகன் சூரியனின் அம்சமாகப் பிறந்த வஜ்ரநாபன்.

வஜ்ரநாபனின் பிள்ளை ககணன். அவனதுவ்மகன் வித்ருதி. வித்ருதியின் மகன் ஹிரண்யநாபன்.
இவன் ஜைமினி மஹரிஷியின் சீடன் ஆவான். சிறந்த யோகாசார்யனாக விளங்கினான். கோசல தேசத்தில் பிறந்த யாக்ஞவல்க்யர் இவனிடம் சீடராக இருந்து அத்யாத்ம யோகத்தைக் கற்றார்.

ஹிரண்யநாபனின் மகன் புஷ்யன். அவனது மகன் த்ருவஸந்தி. இவனது மகன் சுதர்சனன். அவனது மகன் அக்னிவர்ணன். அவனது மகன் சீக்ரன். அவனது மகன் மரு.

மரு பல யோக சாதனைகளைச் செய்து, பல சித்திகளைக் கைவரப் பெற்று இன்னும் வசித்துக்கொண்டிருக்கிறார்.
இக்கலியுகத்தின் முடிவில் அழியப்போகும் சூரிய வம்சத்தை மறுபடியும் துவங்கி வைக்கப்போகிறார்.

மருவின் மகன் ப்ரஸ்ருதன். அவன் மகன் ஸந்தி. ஸந்தியின் மகன் அமர்ஷணன். அவனது மகன் மஹஸ்வான். அவனது மகன் விச்வஸாஹ்வன்.

இவனது மகன் ப்ரஸேனஜித். அவனது மகன் தக்ஷகன். அவனது மகன் ப்ருஹத்பலன்.
பரீக்ஷித்! இந்த ப்ருஹத்பலனைத்தான் மஹாபாரதப் போரில் உன் தந்தை அபிமன்யு கொன்றான்.

மேலும் இனி வரப்போகும் இக்ஷ்வாகு வம்சத்து அரசர்களையும் சொல்கிறேன் கேள்.

ப்ருஹத்பலனின் மகன் ப்ருஹத்ரணன். அவனது மகன்களாக உருக்ரியன் பிறப்பான். அவனது மகனாகப் பிறக்கப்போகிறவன் வத்ஸவ்ருத்தன். அவனுக்கு பிரதிவ்யோமன் பிறப்பான். அவனது மகனாக பானுவும், பானுவின் மகனாக திவாகனும் பிறப்பர். இவன் சேனாதிபதியாக விளங்குவான். இவனது மகனாக வீரனான சகதேவன் பிறப்பான். மேலும் இந்தத் தலைமுறையில் வரிசையாக ப்ருஹத்ச்வன், பானுமான், ப்ரதீகாச்வன், ஸுப்ரதீகன், மருதேவன், ஸுநக்ஷத்ரன், புஷ்கரன், அந்தரீக்ஷன், ஸுதபஸ், ஸுமித்ரஜித், ப்ருஹத்ராஜன், பர்ஹிஸ், க்ருதஞ்சயன், ரணஞ்ஜயன், ஸஞ்ஜயன், சாக்கியன், சுத்தோதரன், லாங்கலன், ப்ரஸேனஜித், க்ஷுத்ரகன், ரணகன், ஸுரதன், ஸுமித்ரன் ஆகியோர்.

இவ்வம்சத்தின் கடைசி அரசன் ஸுமித்ரன் ஆவான். இவன் வந்ததும் கலியுகம் ஆரம்பமாகிவிடும். அவனோடு இக்ஷ்வாகுவின் பரம்பரை முடிவுறும்.
தொடர்ந்து நிமியின் வம்சத்தைக் கூறலானர் ஸ்ரீ சுகர்.

மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment