Tuesday, June 23, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 497

கண்ணனின் மனைவிகள் ஒவ்வொருவரும் அழகு, திறமை, செல்வம் ஆகியவற்றில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்லர்.

அவர்கள் அனைவருமே கண்ணனுக்கீடான பத்து புதல்வர்களைப் பெற்றனர்.

எத்தனை மனைவிகளோ அத்தனை உருவங்களை எடுத்து கண்ணன் அவர்கள் திருமாளிகையிலேயே இருந்தான். அதனால் அவர்கள் ஒவ்வொருவரும் கண்ணன் தன்னைவிட்டு வேறெங்கும் செல்வதில்லை. தன்னைத்தான் அதிகம் விரும்புகிறான் என்று எண்ணினர்.

ருக்மிணியைத் தவிர வேறொருவரும் கண்ணனின் பெருமைகளை உணர்ந்தவர் அல்லர். லீலைக்காக அவதாரம்‌ செய்தமையால் அவர்கள் அனைவரையும் மாயையிலேயே வைத்திருந்தான் கண்ணன்.

கண்ணனோ ஆத்மானந்தத்தில் ரமிப்பவன். அவனது அழகிலும், புன்சிரிப்பிலும், கனிந்த பார்வையிலும் மயங்கினர் அப்பெண்கள். ஆனால் அவர்கள் ஒருவராலும் கண்ணனின் இதயத்தைக் கவர இயலவில்லை. கண்ணன் அவர்கள் அனைவரின் செயல்களில் மயங்காது அவர்களின் ஸ்வரூபத்தை ரசித்தான். மிகவும் சாதாரணமாக உலகியல் வாழ்வில் ஈடுபடும் மனிதன்போல் அவர்களுடன் குடும்பம் நடத்தினான்.

கண்ணனின் எட்டு ப்ரதான மனைவிகளின் பெயர்களாவன

ருக்மிணியின் புதல்வர்கள்
ப்ரத்யும்னன், சாருதேஷ்ணன், ஸுதேஷ்ணன், சாருதேஹன், ஸுசாரு, சாருகுப்தன், பத்ரசாரு, சாருசந்த்ரன், விசாரு, சாரு ஆகியோர்.

ஸத்யபாமாவின் புதல்வர்கள் பானு, ஸுபானு, ஸ்வர்பானு, ப்ரபானு, பானுமான், சந்த்ரபானு, ப்ருஹத்பானு, அதிபானு, ஸ்ரீ பானு, ப்ரதிபானு ஆகியோர்.

ஜாம்பவதியின் மகன்கள்
ஸாம்பன், ஸுமித்ரன், புருஜித், சதஜித், ஸஹஸ்ரஜித், விஜயன், சித்ரகேது, வஸுமான், திரவிடன், கிரது ஆகியோர்

ஸத்யா என்னும் நக்னஜிதியின் மகன்கள் 
வீரன், சந்திரன், அஶ்வஸேனன், சித்ரகு, வேகவான், விருஷன், ஆமன், சங்கு, வஸு, குந்தி ஆகிய பதின்மர்.

காளிந்தியின் புதல்வர்கள்
ஶ்ருதன், கவி, விருஷன், வீரன், ஸுபாஹு, பத்ரன், சாந்தி, தர்சன், பூர்ணமாசன், ஸோமகன் ஆகியோர்.

பிரகோஷன், காத்ரவான், ஸிம்ஹன், பலன், பிரபலன், ஊர்த்வகன், மகாசக்தி, ஸஹன், ஓஜஸ், அபராஜிதன் ஆகியோர் லக்ஷ்மணாவின் செல்வங்கள்.

மித்ரவிந்தாவின் புதல்வர்கள்
விருகன், ஹர்ஷன், அநிலன், கிருத்ரன், வர்தனன், அன்னாதன், மகாசன், பாவனன், வஹ்நி, க்ஷுதி முதலானோர்.

பத்ராவின் புதல்வர்கள் பின்வருமாறு
ஸங்கிரமஜித், பிருஹத்ஸேனன், சூரன், பிரஹணன், அரிஜித், ஜயன், ஸுபத்ரன், வாமன், ஆயு, ஸத்யகன் ஆகியோர் பத்ரையின் புதல் வர்கள்.

இவர்களைத் தவிர கண்ணனுக்கு ரோஹிணி முதலான 16100 மனைவிகள் உள்ளனர் என்று பார்த்தோம். ருக்மிணியின் மகனான ப்ரத்யும்னன் மாயாவதியைத் தவிர தாய் மாமனான ருக்மியின் மகளான ருக்மவதி என்பவளை மணந்தான். அவளது மகன் அநிருத்தன் ஆவான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment