Thursday, January 17, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 193 ஸ்ரீ நாராயண கவசம் - 2

15. தன் தெற்றிப்பற்களால் பூமியை ப்ரளய ஜலத்தினின்று தூக்கிக்கொண்டு வந்தாரே. அந்த ஸ்ரீவராஹர் தனிவழிப்பாதையில் என்னைக் காக்கட்டும். மலைச் சிகரங்களில் பரசுராமரும், பயணங்களின்போது, ராமலக்ஷ்மணர்களும் என்னைக்‌ காக்கட்டும்.

16. எல்லாவிதமான பில்லி சூனியம், மற்றும் ஆபிசாரங்களிலிருந்தும், ஏமாற்றங்களிலிருந்தும் ஸ்ரீமன் நாராயணன் என்னைக் காக்கட்டும். ரிஷிகளில் சிறந்தவரான நரன் அர்ஜுனன் என்னை செருக்கிலிருந்து கப்பாற்றட்டும். தத்தாத்ரேயர் என்னை யோகங்களின் இடையில் ஏற்படும் தொந்தரவுகளிலிருந்து என்னைக் காக்கட்டும். ஸ்ரீ கபில வாசுதேவர் என்னை கர்ம பந்தங்களிலிருந்து காபாற்றட்டும்.

17. ஸனத்குமாரர் என்னை காமத்திலிருந்து காத்தருளட்டும். ஹயக்ரீவர் நடைபாதைகளிலும், வழியிலும் உள்ள தெய்வங்களை நான் வழிபடாமல் சென்ற பாவத்திலிருந்து என்னைக் காக்கட்டும். பகவானின் பூஜைக்கு ஏற்படும் தடைகளையும், பகவான்/ குரு சேவையில் ஏற்படும் முப்பத்தியிரண்டு விதமான அபராதங்களையும் தேவரிஷி நாரதர் போக்கட்டும். கூர்மாவதார பகவான் என்னை நரகத்தில் விழாமல் காக்கட்டும்.

18. தன்வந்த்ரி பகவான் தூய்மையற்ற உணவால் ஏற்படும் உபாதைகளிலிருந்து என்னைக் காக்கட்டும். ரிஷபதேவர் இன்ப துன்ப இரட்டைகளிலிருந்தும் யக்ஞமூர்த்தி இழி/ பழிச்சொற்களிலிருந்தும், மனிதர்களால் ஏற்படும் தொந்தரவுகளிலிருந்து பலராமனும், பாம்புகளிடமிருந்து ஆதிசேஷனும் என்னை எப்போதும் காக்கட்டும்.

19. அஞ்ஞானத்திலிருந்து வியாஸர் காக்கட்டும்.‌ உலக மயக்கங்களிலிருந்து புத்த பகவான் காக்கட்டும். கல்கி பகவான் கலியின் கொடுமைகளிலிருந்து என்னை விடுவிக்கட்டும்.

20. காலையில் என்னை கேசவனும், குழலூதும் கண்ணன் ஸந்தி வேளையிலும், பிற்பகலில் நாராயணனும், நடுப்பகலில் சக்கரமேந்திய மஹாவிஷ்ணுவும் என்னைக் காக்கட்டும்.

21.சார்ங்கம் தரித்த மதுசூதனன் என்னை பிற்பகலில் காக்கட்டும். மும்மூர்த்திகளின் ஸ்வரூபமான மாதவன் மாலையில் எனைக் காக்கட்டும். ப்ரதோஷ காலத்தில் ஹ்ருஷீகேசனும், முன்னிரவிலும் பின்னிரவிலும் பத்மநாபனும் என்னைக் காக்கட்டும்.

22. ஸ்ரீ வத்ஸம் தரித்த ஸ்ரீ ஹரி என்னை இரவிலும், விடியும் வேளையில் நந்தகம் ஏந்திய ஜனார்த்தனனும், காலையில் தாமோதரனும், ஸந்தி வேளைகளில் விஸ்வரூபனான பகவானும் என்னைக் காக்கட்டும்.

23. சுதர்சன மூர்த்தியே! தங்களது சுற்றுவட்டம் மிகவும் கூர்மையானது. ஊழித்தீ போன்றது. காற்றுடன் சேர்ந்த நெருப்பு காய்ந்த புற்களைப் பொசுக்குவதுபோல் நீர் என் பகைவர்களைப் பொசுக்கவேண்டும்.

24. கௌமோதகமான கதையே! உங்களிடமிருந்து கிளம்பும்‌ தீப்பொறி வஜ்ரப்படை போன்றது. ஸ்ரீமன் நாராயணனுக்கு மிகவும் ப்ரியமானவள் நீ. அவரது தொண்டனான என்னை அரக்கர்கள், யக்ஷர்கள், ராக்ஷஸர்கள், கிரகங்கள் ஆகியவற்றிலிருந்து காப்பற்று.

25. பாஞ்சஜன்யம் என்ற பெயர்கொண்ட வெண்சங்கே! ஸ்ரீ க்ருஷ்ணன் உன்னை வாயில் வைத்து ஊதுவாரே. அவ்வொலியால்‌ நீ என் எதிரிகளின் இதயத்தைப் பிளந்துவிடு. ப்ரேதங்கள், பூதங்கள், பிசாசங்கள், ப்ரும்மராக்ஷஸர்கள் ஆகியவர்களை துரத்தி ஓடச் செய். அவர்களின் பார்வையிலிந்து என்னைக் காப்பற்று.

26. நந்தகம் எனப்படும் கூர்மையான கத்தியே! நீ பகவானுக்கு ப்ரியமானவன். என் பகைவர்களை சின்னாபின்னமாக்கு. சந்திரமண்டலம் போன்று நூற்றுக்கணக்கான மண்டலங்களுடைய கேடயமே! பகைவர்களின் கொள்ளிக் கண் பார்வையிலிருந்து என்னைக் காப்பாற்று.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment