Saturday, August 31, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 320

விதர்ப்பனின் மகன்கள் மூவர். குசன், க்ரதன், ரோமபாதன். இவர்களுள் ரோமபாதன் மிகவும் புகழ் பெற்று விளங்கினான்.

ரோமபாதனின் மகன் பப்ரு. இவனது வம்சத்தில் தோன்றியவன் சேதி. சேதி வம்சத்தில் பிறந்தவர்கள் தமகோஷனும், சிசுபாலனும்.

விதர்ப்பனின் மகன் க்ரதனின் வம்சம் குந்தி, த்ருஷ்டி, நிர்வ்ருதி, தாசார்ஹன், வியோமன், ஜீமுதன், விக்ருதி, பீமரதன், நவரதன், தசரதன், சகுனி, கரம்பி, தேவராதன், தேவக்ஷேத்ரன், மது, குருவசன், அனு, புருஹோத்ரன், ஆயு, ஸாத்வதன் ஆகியோர்.

ஸாத்வதனுக்கு பஜமானன், பஜி, திவ்யன், விருஷ்ணி, தேவவிரதன், அந்தகன், மஹாபோஜன் ஆகிய ஏழு மகன்கள். பஜமானனின் குமாரர்கள் அறுவர். நிம்லோசி, கிங்கிணன், திருஷ்டி, சதாஜித், ஸஹஸாஜித், அயுதாஜித் ஆகியோர்.

ஸாத்வதனின் மகனான தேவவிருதனின் புதல்வன் பப்ரு. இவன் மிகவும் புகழ் பெற்று விளங்கினான். இவனிடம் உபதேசம் பெற்று பதிநான்காயிரத்து அறுபத்தைந்து பேர்கள் கரையேறினர்.

ஸாத்வதனின் மகன்களுள் மஹாபோஜன் ப்ரிய தர்மாத்மா. அறநெறி தவறாது ஒழுகுபவன்.
அவனது வம்சத்தில் போக வம்சத்தவர்களான யாதவர்கள் தோன்றினர்.

வ்ருஷ்ணியின் புதல்வர்கள் சுமித்திரன், யுதாஜித் ஆகியோர். யுதாஜித்திற்கு சினி, அனமித்ரன் என இரு மகன்கள். அனமித்ரனின் மகன் நிம்னன். அவனது புதல்வர்கள் ஸத்ராஜித், பிரஸேனன் ஆகியோர்.

சினியின் மகன் ஸத்யகன்.
அவனது மகன் யுதானன் என்கிற ஸாத்யகி.
அனமித்ரனின் மூன்றாவது மகன் வ்ருஷ்ணி. இவனது புதல்வர்கள் ச்வபல்கன், சித்ர்ரதன் ஆகியோர். ச்வபல்கனது மனைவி காந்தினி. அவர்கள்து மகன்கள் அக்ரூரன், அஸங்கன், ஸாரமேயன், மிருதுரன், மிருதுவித், கிரி, தாம்வ்ருத்தன், ஸுகர்மா, க்ஷேத்ரோபேக்ஷன், அரிமர்தனன், சத்ருக்னன், கந்தமாதன், ப்ரதிபாஹு ஆகியோர்.

அவர்களுக்கு ஸுசீரா என்ற தங்கை உண்டு.
அக்ரூரரின் புதல்வர்கள் தேவவான், உபதேவன். ச்வபல்கனது சகொஇதரனான சித்ரரதனுக்கு பிருது, விதூரதன் முதலான பல மகன்கள் உண்டு.

சாத்வதனின் மகன் அந்தகன். அவனுக்கு குகூரன், பஜமானன், சுசி, கம்பலபர்ஹிஷன் என நான்கு மகன்கள். குகூரனின் வம்சம் வஹ்னி, விலோமா, சுபோதரோமா, அனு, அந்தகன், துந்துபி, அரித்யோதன், புனர்வஸு. புனர்வஸுவுக்கு ஆஹுகன் என்ற மகனும் ஆஹுகி என்ற மகளும் இருந்தனர்.

ஆஹுகனின் மகன்கள் தேவகன், உக்ரஸேனன் ஆகியோர். தேவகனது புதல்வர்கள் தேவவான், உபதேவன், ஸுதேவன், தேவவர்தனன். புதல்விகள் திருததேவி, சாந்திதேவி, உபதேவி, ஸ்ரீ தேவி, தேவரக்ஷிதை, ஸஹதேவி, மற்றும் தேவகி. இவர்கள் அனைவரையும் வஸுதேவர் மணந்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment